அயோத்தி வழக்கு விசாரணை- அனைத்து வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் இலக்கு
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை அக்டோபர் 18-ந் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ல் தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய இந்நிலத்தை நிர்மோஹி அகாடா, ராம் லால்லா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது அத்தீர்ப்பு.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியஸ்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.
ஆனால் மத்தியஸ்த குழுவானது பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என தெரிவித்துவிட்டது. இதனால் இவ்வழக்கின் விசாரணயானது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நடைபெற்று வருகிறது.
வழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை!
கடந்த ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் இவ்வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கில் அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை அக்டோபர் 18-ந் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் தேவைப்பட்டால் சனிக்கிழமை கூட நீதிமன்ற விசாரணை நடைபெறும் என்றும் மத்தியஸ்த குழுவும் தங்களது முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெற இருக்கிறார். அதற்குள் இவ்வழக்கில் அவர் தீர்ப்பளிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.