மோடி மீதான திருடர் விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு.. சுப்ரீம் கோர்ட் வார்னிங்
பிரதமர் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்த விமர்சனத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்த கருத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரபேல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று ரபேல் தொடர்பான இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு முடிவிற்கு வந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இந்த மறுசீராய்வு வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்னொரு பக்கம் ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்தது தொடர்பான வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ரபேல் வழக்கு
ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மோடி ரபேல் ஒப்பந்தம் மூலம் திருடிவிட்டார். அம்பானிக்கு இவர் 30000 கோடி ரூபாயை அளித்து திருடுவதற்கு உதவி இருக்கிறார் என்று குறிப்பிட்டார். மோடியை உச்ச நீதிமன்றமே திருடர் என்று கூறிவிட்டது, என்று குறிப்பிட்டார்.
திருடர் எப்படி
இதற்காக ராகுல் காந்தி, காவலாளியே திருடர் என்று பொருள்படும் வகையில் சவுக்கித்தார் சோர் ஹே என்று குறிப்பிட்டார். லோக்சபா தேர்தலில் இந்த வாசகம் பெரிய வைரலானது. இந்த நிலையில் ராகுலின் கருத்துக்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பிரதமரை ராகுல் தரைகுறைவாக பேசுகிறார் என்று பாஜக செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி மூலம் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது .
விளக்கம்
இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதமே நோட்டீஸ் அனுப்பியது. மோடியை பற்றி தவறாக பேசியது ஏன் என்று நீதிமன்றம் விளக்கம் கேட்டது.
மன்னிப்பு கேட்டார்
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜர் ஆன ராகுல் காந்தி தன்னுடைய கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதன்பின் மீண்டும் ராகுல் காந்தி மன்னிப்பு கோரினார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கே.எம் ஜோசப், சஞ்சன் கிசான் கவுல் ஆகியோர் அமர்வு இதை விசாரித்தது. ரபேல் மறுசீராய்வு வழக்குடன் சேர்த்து இந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
வழக்கு முடிந்தது
அதன்படி பிரதமர் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்த கருத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
ராகுல் காந்தியின் மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனாலும், ராகுல் காந்தி எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும், பெரிய கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் கவனமாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.