டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்- திமுக, காங்., மனுக்கள் மீது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது.

இடஒதுக்கீட்டுடன் வார்டு மறுவரையறைகள் செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 28 மாவட்டங்களில் இடஒதுக்கீட்டுடன் கூடிய வார்டு மறுவரையறைகள் செய்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

SC to hear plea of DMK, Congress against TN Local Body Election Notification

எஞ்சிய 9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் உடனே வெளியிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றாமல் வார்டு மறுவரையறைகள் செய்யாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் திமுக மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

உண்மையிலேயே மர்ம தீவுதானா.. 5 ஆண்டுகளில் 10 ஐஐடிகளில் 27 தற்கொலைகள்.. அதிர வைக்கும் ஆர்டிஐ தகவல்! உண்மையிலேயே மர்ம தீவுதானா.. 5 ஆண்டுகளில் 10 ஐஐடிகளில் 27 தற்கொலைகள்.. அதிர வைக்கும் ஆர்டிஐ தகவல்!

இம்மனுக்கள் மீது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திமுக தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு மிகவும் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Supreme Court to hear on December 11, a fresh plea of DMK and Congress against Tamil Nadu local body election notification.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X