டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை கோயில் விவகாரம்.. கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு.. உச்ச நீதிமன்றத்தில் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் சபரிமலை கோயிலின் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐப்பனை தரிசிக்க ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதம் வரை பல கோடி பக்தர்கள் நாடு முழுவதிலிருந்தும் வருகிறார்கள். இதேபோல் சபரிமலை ஐய்யன் கோயில் திறக்கப்படும் மற்ற சமயங்களிலும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய காலம் காலமாக தடை உள்ளது.

separate law for administration of sabarimala temple: kerala govt said on supreme court

இதனையடுத்து, சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், தரிசனம் செய்ய கோயிலுக்கு சென்ற பெண்கள் பலரும், அங்கிருந்த பக்தர்களால் திருப்பி அனுப்பி இந்து அமைப்பினர் போராடங்கள் நடத்தினர். குறிப்பாக ஆண்டு கடந்த டிசம்பர் - ஜனவரி மாதத்தில் சபரிமலை பகுதியில் பெண்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், சபரிமலை கோயில் தொடர்பான வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் சபரிமலை கோயிலின் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

English summary
kerala government decided separate law for administration of sabarimala temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X