17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை
டெல்லி: 17 பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை, தலித் பட்டியலில் சேர்க்கும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இடைத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம், மாநில பாஜக அரசு, காஷ்யப், ராஜ்பர், திவார், பிண்ட், குமார், கஹார், கெவத், நிஷாத், பார், மல்லா, பிரஜாபதி, திமர், பாதம், துர்ஹா, கோடியா, மன்ஜி மற்றும் மச்சுவா போன்ற பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு பட்டியலினத்தவர்களுக்கான சாதி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் எழும்பியது மட்டுமல்லாமல், தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது. 12 சட்டசபை இடங்களுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல்கள் மற்றும் 2022 உ.பி. பொதுத் தேர்தலுக்காக ஜாதி ஓட்டுக்களை வெல்லும் தந்திரமாக யோகி அரசின் இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது.
ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு
யோகி அரசின் உத்தரவை எதிர்த்து, சமூக ஆர்வலர் கோரக் பிரசாத் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், உ.பி. மாநில அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.