தற்கொலை படையினரின் களமாக மாறிவிட்டது டெல்லி ஷாகீன் பாக்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறும் ஷாகீன் பாக் பகுதி தற்கொலை படையினரை உருவாக்கும் களமாக மாறி இருக்கிறது என மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்தது. இத்தேர்தலில் மத்திய பாஜக அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், கிரிராஜ் சிங் ஆகியோரது பேச்சுகள் பெரும் சர்ச்சைகளாகின.
இந்நிலையில் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றும் ஷாகீன் பாக் பகுதியை தற்கொலைப் படையினரை உருவாக்கும் களம் என விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கிரிராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது:
ஷாகீன் பாக் என்பது ஒரு இயக்கம் அல்ல. அங்கே தற்கொலைப் படையினரை உருவாக்குகின்றனர் . நாட்டின் தலைநகரில் அமர்ந்து கொண்டு தேசத்துக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகின்றனர். ஷாகீன் போராட்ட களத்தில் இறந்து போன குழந்தையை போராளி என்கிறார் ஒரு பெண்மணி. அப்படியானால் தற்கொலை படை அல்லாமல் வேறு என்னவாம்?
வயசாயிடுச்சு.. கீழே குனிய முடியல.. அதனாலதான்.. திண்டுக்கல்லாருக்கு சப்போர்ட்டுக்கு வந்த ஜெயக்குமார்!
இத்தகைய தற்கொலை படையினரிடமும் காலிபாத் இயக்கத்தினரிடமும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.