மகா. விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு!
டெல்லி: மகாராஷ்டிரா விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக இன்று பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் சந்தித்து பேசினார்.
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருகிறது. மூன்று கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி உள்ளன.
இருந்தபோதும் புதிய அரசு அமைப்பதற்கான சமிக்ஞைகள் தென்படாமல் இருந்ததால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியுள்ளார்.
அமைச்சர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட எடியூரப்பா!
இச்சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது. இதில் மகாராஷ்டிரா விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக சரத்பவார் கூறியுள்ளார்.
இருப்பினும் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கும் நிலையில் சரப்தவாரின் மோடியுடனான சந்திப்பு சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.