டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்கள் டாய்லெட்டுக்குள்.. கிரிக்கெட் வீரர்களின் மனைவியர் செய்த "அந்த" காரியம்.. அதிர வைத்த ஷெர்லின்

பெண்கள் டாய்லெட்டுக்குள் ஷெர்லின் செய்த காரியம்

Google Oneindia Tamil News

டெல்லி: எங்கு பார்த்தாலும் இப்போது போதைப் பொருள் பஞ்சாயத்துதான் பெரிதாக ஓட ஆரம்பித்திருக்கிறது. பாலிவுட், கன்னட சினிமா என்பதைத் தாண்டி இப்போது ஐபிஎல்லிலும் போதைப் பொருள் புழங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் போட்டிகளுக்குப் பிறகு நடக்கும் பார்ட்டிகளில் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக இந்தி கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டால் திரையுலகம் மட்டுமல்லாமல் விளையாட்டு உலகிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் முடிந்து பிறகு பார்ட்டி வைப்பார்கள். வீரர்கள் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டு ரிலாக்ஸ் ஆவார்கள். அந்த பார்ட்டிகளில்தான் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதை தானே நேரில் பார்த்ததாக கூறி அதிர வைத்துள்ளார் ஷெர்லின் சோப்ரா.

160 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்... குடைச்சல் தரும் அதிருப்தியாளர்களை யார்தான் சமாளிப்பது?160 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்... குடைச்சல் தரும் அதிருப்தியாளர்களை யார்தான் சமாளிப்பது?

 கொல்கத்தா

கொல்கத்தா

இதுதொடர்பாக ஏபிபி சானலுக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "நான் சொலவது சில வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடந்தது. அன்று இரவு போட்டிக்குப் பிறகு ஒரு பார்ட்டி நடத்தினர். அதில் நானும் கலந்திருந்தேன். அப்போது சில வீரர்களின் மனைவிகளும், சில வீரர்களின் காதலியரும் கூட அதில் பங்கேற்றிருந்தனர்.

டாய்லெட்

டாய்லெட்

அவர்கள் அனைவருமே பெண்களுக்கான டாய்லெட்டில் வைத்து போதைப் பொருளை பயன்படுத்தினர். அது கொகைன்தான். நல்லா தெரியும். அதை நான் நேரில் பார்த்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன். அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சம்பந்தப்பட்ட போட்டிக்குப் பிறகு நடந்த பார்ட்டி ஆகும். அதுவும் நல்லாத் தெரியும்.

காதலி

காதலி

என்னை அந்த பார்ட்டிக்கு கூப்பிட்டிருந்தனர். பல வீரர்களும் அவர்களின் மனைவியர், காதலியர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்தப் பார்ட்டியை நானும் என்ஜாய் செய்தன். ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் இந்த கொகைன் பயன்பாடுதான், அதிலும் பெண்கள் அதைப் பயன்படுத்தியதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஷெர்லின்

ஷெர்லின்

பெண்களே இப்படி பண்ணியிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் கிரிக்கெட் வீரர்களும் கூட இதை போல செய்திருப்பார்கள். ஆண்கள் டாய்லெட்டுக்கு போய் பார்த்திருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் நான்தான் போகவில்லை" என்று குண்டைப் போட்டுள்ளார் ஷெர்லின் சோப்ரா.

 போதைப்பொருள்

போதைப்பொருள்

இவர் சொல்லியிருப்பதை பார்த்தால் ஐபிஎல் பார்ட்டிகளில் போதை பொருள் உபயோகம் அதிகம் இருப்பது போலத் தெரிகிறது. ஏற்கனவே நடிகைகளை குறி வைத்து போதைப் பொருள் பிரிவினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பல பாலிவுட் நட்சத்திரங்கள் குறிப்பாக நடிகைகள், கன்னட நடிகைகள் சிலர் என சிக்கியுள்ளனர்.

ஐபிஎல்

ஐபிஎல்

குறிப்பாக தீபிகா படுகோனே, ஷிரத்தா கபூர், சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், பேஷன் டிசைனர் சைமன் கம்பட்டா என லிஸ்ட் பெருசா இருக்கு. இந்த நிலையில் ஐபிஎல் பார்ட்டிகளையும் உள்ளே இழுத்துப் போட்டுள்ளார் ஷர்லின் சோப்ரா. இதனால் புதிய பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

English summary
Film actress Sherlyn Chopra said that IPL after parties used Cocaine few years back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X