6.1% கிடையாது வெறும் 5%தான்.. 2019-2020 மொத்த ஜிடிபி மேலும் குறையும்.. ஆர்பிஐ அதிர்ச்சி கணிப்பு!
2019-2020 மொத்தம் ஜிடிபி மேலும் குறையும், முன்பு கணிக்கப்பட்டு இருந்த 6.1% ஜிடிபியில் இருந்து வெறும் 5%தான் ஜிடிபி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2019-2020 மொத்தம் ஜிடிபி மேலும் குறையும், முன்பு கணிக்கப்பட்டு இருந்த 6.1% ஜிடிபியில் இருந்து வெறும் 5%தான் ஜிடிபி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது. கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும்.
இப்படி தொடர்ந்து ஜிடிபி சரிந்து வருவது எல்லோரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அரசு இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறி வருகிறது.
குடும்ப பிரச்சனை.. மனஸ்தாபம்.. திமுகவில் இணைந்தார் முதல்வர் பழனிசாமியின் பெரியம்மா மகன்!
என்ன கணிப்பு
இந்த நிலையில் இந்த மொத்த ஆண்டின் ஜிடிபி குறித்து தற்போது ஆர்பிஐ கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தற்போது பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. இதனால் ரெப்போ விகிதத்தை மேலும் குறைக்கும் எண்ணம் இல்லை. போதுமான அளவிற்கு ரெப்போ விகிதம் ஏற்கனவே குறைக்கப்பட்டுவிட்டது.
இனி மாட்டோம்
இனி அதை குறைக்க மாட்டோம். ரெப்போ வட்டி விகிதம் 5.15% என்பதிலேயே நீடிக்கும். அதில் இப்போது மாற்றம் எதுவும் செய்ய மாட்டோம், என்று ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துக் கொண்டே வந்தது. இதனால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பலன் இல்லை
ஆனால் இது பெரிய அளவில் பலன் தரவில்லை. இந்த நிலையில் 2019-2020 மொத்தம் ஜிடிபி மேலும் குறையும், முன்பு கணிக்கப்பட்டு இருந்த 6.1% ஜிடிபியில் இருந்து வெறும் 5%தான் ஜிடிபி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மிக மோசம்
முதல் இரண்டு காலாண்டுகளின் ஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் மொத்த நிதி ஆண்டின் ஜிடிபி மேலும் சரியும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பொதுமக்கள், நிறுவனங்கள் என எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
எங்கு சரிவு
முக்கிய தொழிற்துறையில், மூலதன துறையில் இதனால் பெரிய சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.