துபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
Recommended Video
டெல்லி: துபாய் பாணியில் ஆண்டுதோறும், இந்தியாவில், ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளச் சூழ்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
6 வருடங்களில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிவடைந்துள்ள சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு பொருளாதார ஊக்க, நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். துபாய் போலவே இந்தியாவில் மெகா ஷாப்பிங் திருவிழாக்கள் நடத்தி இதற்காக ஊக்கம் தரப்படும். பெரிய அளவிலான கொள்முதல் மற்றும் தொழில் இணைப்பு திட்டங்களுக்கு இது உதவும்.
Non-Tariff தடையை சீராக்கவும், நமது ஏற்றுமதியாளர்களுக்கு தரச்சான்று வழங்கவும், பிபிபி நடைமுறையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை உதவும்.
பொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்
ஷாப்பிங் திருவிழாக்கள் நடைபெறும் நான்கு இடங்கள் எவை என்பதை, வர்த்தக அமைச்சகம் தீர்மானிக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.