மிகா சிங்குக்கு வேற வேலையே இல்லையா.. மறுபடியும் பாலியல் வழக்கில் சிக்கி கைது
Recommended Video
டெல்லி: 17வயது பிரேசில் பெண் ஒருவர் பாடகர் மிகா சிங் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மிகா சிங் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிகா சிங், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு தேவையற்ற படங்களை அனுப்பியதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி, மிகா சிங் தன்னை மானபங்கபடுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கிற்கு எதிராக மிகா சிங்கும் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். சில வருடங்களுக்கு முன்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததாக மும்பை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
2016-ம் ஆண்டு தன் பிறந்தநாள் விழாவில் மிகா தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் புகார் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
தற்போது பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த 17 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மிகா சிங்கை ஞாயிற்றுக்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.