எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையா, பாம்பே ஜெயஶ்ரீ, சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஶ்ரீ விருது
டெல்லி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஶ்ரீ, விவசாயத்துறையில் பாப்பம்மாள், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு பத்மஶ்ரீ விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
Recommended Video
நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே, மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கர்நாடகாவின் பெல்லே மோனப்பா ஹெக்டே, அமெரிக்காவின் நரீந்தர்சிங் கப்னாய், டெல்லி மவுலானா வகிதுதீன் கான், டெல்லி பிபி லால், ஒடிஷா மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் சாஹூ ஆகிய 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கிருஷ்ணநாயர் சாந்தகுமாரி சித்ரா, மறைந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய், கர்நாடகாவின் சந்திரசேகர கம்பாரா, உபி நிர்பேந்திர மிஸ்ரா, முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், குஜராத் மாஜி முதல்வர் கேசுபாய் படேல், உபி கல்பே சாதிக், மகாராஷ்டிராவின் ரஜினிகாந்த் தேவிதாஸ் ஷரோப், ஹரியானாவின் தர்லோசன் சிங் ஆகிய 10 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, பாம்பே ஜெயஶ்ரீ, வில்லுப் பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், விவசாயத்துறையில் பாப்பம்மாள், கூடைப்பந்து வீராங்கனை அனிதா உட்பட 102 பேருக்கு பத்மஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.