இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 705 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உலக அளவில் இந்தியாவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48, 661 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 705 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 13,85,522 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,85,577 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,67,882., இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 32,063.
உலக அளவில் கொரோனா உடன் போராடி மீண்ட 99.7 லட்சம் பேர் - 1.61 கோடி பேர் பாதிப்பு
Recommended Video
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 3,66,368 பேரும் தமிழகத்தில் 2,06,737 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,29,531 பேரும் கர்நாடகாவில் 90,942 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.