காஷ்மீர் எல்லையில் நிலைமை சரியில்லை.. எப்போது வேண்டுமானாலும் பாக். தாக்கும்.. ராணுவ தளபதி வார்னிங்!
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம், இந்தியா அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம், இந்தியா அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சனை மற்றும் குடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக உலக நாடுகள் இந்தியாவை தீவிரமாக கவனிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் இந்தியாவை தீவிரமாக கவனித்து வருகிறது.
இந்தியாவில் நடந்து வரும் மாற்றங்களை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் இந்தியா இடையிலான உறவு மேலும் மோசம் அடைய தொடங்கி இருக்கிறது.
பேட்டி அளித்தார்
இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் ராணுவ தளபதி பிபின் ராவத் இதுகுறித்து தெரிவித்ததாவது, காஷ்மீர் எல்லையில் தற்போது நிலைமை சரி இல்லை. அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலைமை மொத்தமாக மோசம் அடையும். நாங்கள் முழு வீச்சான தாக்குதலுக்கு தயாராக இருக்கிறோம்.
போர் எப்படி
இதற்காக அனைத்து விதமான போர் கருவிகளையும் தயாராக வைத்து இருக்கிறோம். முழு திட்டங்களை வகுத்து தயார் நிலையில் வைத்து இருக்கிறோம். பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு படை காஷ்மீர் எல்லையில் அத்து மீறி வருகிறது.
பாகிஸ்தான்
கடந்த சில தினங்களாக அங்கு பாகிஸ்தான் சிறிய சிறிய தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா உடனடியாக பதில் தாக்குதல் நடத்தி சிறப்பான பதிலடி கொடுத்து வருகிறது. 3 நாட்களுக்கு ஒருமுறை இப்படி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான்
கடந்த வருடம் முழுக்க இந்தியா பாகிஸ்தான் இடையே இப்படி நிறைய பிரச்சனை வந்தது. இந்த வருட தொடக்கத்தில் எல்லையில் முழு போர் நடக்க வேண்டிய சூழ்நிலை கூட உருவானது. கடைசியில் அந்த போர் சூழல் தடுத்து நிறுத்தப்பட்டது என்று, பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.