கட்சி தலைமையகத்தை மாற்றியது தப்பா போச்சு... மூத்த பாஜக தலைவர்கள் பீல் பண்றது இதுதான்
Recommended Video
டெல்லி: பாஜகவின் தலைமை அலுவலகத்தை புதிய இடத்திற்கு மாற்றியதால் தான் மூன்று மாநிலங்களில் தோல்வியை தழுவியதாக அக்கட்சியின் தலைவர்களில் சிலர் கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி, பீகார் தேர்தலுக்கு பிறகு புதிய தலைமையகத்திற்கு கட்சி அலுவலக பணிகள் மாற்றப்பட்டன. அதன் பின்னர் நடந்த கர்நாடகா தேர்தலில் அதிக இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைத்து, ஒரு வாரத்திற்குள் கவிழ்ந்தது.
சமீபத்தில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் இழுபறியான நிலையில் தான் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. எனவே, டீன் தயால் உபாத்யா மார்க் பகுதியில் இருந்து பழைய படி 11 அசோக் சாலைக்கு மாற்ற வேண்டும் என பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
3 மாநில தேர்தலுக்கு பிறகு நடந்த கூட்டத்தில் கூட சில மூத்த தலைவர்கள் இதுகுறித்து பேசியதாக கூறப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த தலைவர்களை முக்கிய பொறுப்பில் நியமிப்பது சரியானதாக இருக்கும் என்றும், ராகுல் காந்தி கூட பிரதமர் கனவில் செயலாற்றி வருகிறார். அது போல, பாஜகவிலும் டெல்லியைச் சேர்ந்த தலைவரை நியமித்தால் அதிர்ஷ்டம் வர வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர்களில் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.