திகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு
Recommended Video
டெல்லி: டெல்லி திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தனர்.
ஐஎன்எக்ஸ் நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குடும்பத்தார் அவ்வப்போது சந்தித்து பேசிவருகிறார்கள்.
இன்று, கார்த்தி சிதம்பரம் திகார் சிறைக்கு சென்றபோது அவருடன் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சிதம்பரத்தை சந்தித்து பேசி நலம் விசாரித்து வருகிறார்கள்.
Delhi: Congress Interim President Sonia Gandhi and Former PM Dr Manmohan Singh arrive at Tihar Jail to meet P Chidambaram. pic.twitter.com/ouX4FXniNS
— ANI (@ANI) September 23, 2019
கடந்த 5ம் தேதி முதல் சிதம்பரம் திகார், சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவலை நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று மீண்டும் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது.