23ம் தேதி சோனியா போடும் அதிரடி ஸ்கெட்ச்... ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு முக்கிய கடிதம்
Recommended Video
டெல்லி: தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி நடக்க உள்ளதாவும், இதில் பங்கேற்க வருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி கடிதம் அனுப்பி உள்ளார்.
மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிந்த பின்னர், 7 கட்டங்களாக நடந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 23ம் தேதி நடக்கிறது.
அன்றைக்கே எதிர்க்கட்சிகள் அனைத்தையும் மொத்தமாக கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
எரியுது வங்கம்.. டிவிட்டரில் வைரலாகும் மேற்குவங்க வன்முறை! #BengalBurning
ஆதரவு கேட்க முடிவு
தற்போது காங்கிரஸ் கூட்டணியில், திமுக , தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகள் உள்ளன. இதனால் எப்படியும் ஆட்சி அமைக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தால் தான் சாத்தியம் என்பதை உணர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், அதற்காக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேசி தேர்தலுக்கு பின்பு ஆதரவு தாருங்கள் என கேட்டு வருகிறார்கள்.
23ம் தேதி கூட்டம்
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியாகாந்தி அனுப்பி உள்ளார். அதில், "டெல்லியில் வருகிற 23-ந் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைப்பாடு பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது, அதில் நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கேசிஆருக்கும் கடிதம்
காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் சோனியா காந்தி இக்கடிதத்தை அனுப்பி உள்ளார்.
சோனியா முயற்சி
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதே நாளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்க இருப்பதால், அன்றைக்கே தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால் பிரதமராக ராகுலை அறிவிக்க சோனியா காந்தி முயற்சி எடுத்து வருகிறார்.