டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆய்வு.. தனியாருக்கு அதிரடி அனுமதி.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இந்தியாவில் விண்வெளி துறை மற்றும் அணுக்கதிர் ஆராய்ச்சி துறையில் தனியாரை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் விண்வெளி துறை மற்றும் அணுக்கதிர் ஆராய்ச்சி துறையில் தனியாரை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பல துறைகளில் தனியார் முதலீடுக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 3 நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த வாரம் 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இதை தொடர்ந்து நான்காவது நாளாக இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டார்.

    Space research and Nuclear research will be privatized says FB Nirmala

    பல்வேறு துறைகளில் தனியார் பங்களிப்பிற்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது. அதில், வேற்று கிரக ஆய்வு, விண்வெளி பயணம் போன்றவற்றுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய தனியார் துறைக்கு அனுமதி அளிக்கப்படும். சாட்டிலைட் வழங்கும் ரிமோட் சென்சிங் தரவை விவரங்களை தனியார்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

    இஸ்ரோ வசதிகள் மற்றும் இஸ்ரோவின் பிற தொழில்நுட்பங்களை தனியார் துறை பயன்படுத்திக் கொள்ளலாம். இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    அணு சக்தி TO இஸ்ரோ.. பல துறைகளில் தனியார் முதலீடுக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு அணு சக்தி TO இஸ்ரோ.. பல துறைகளில் தனியார் முதலீடுக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    ராக்கெட் ஏவுதலில், ஏவுதளங்கள் அமைப்பில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல் அணுக்கதிர் ஆராய்ச்சியில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். ஐசோடோப் ஆய்வுக்கு பிரத்யேக அணுக்கூடம் அமைக்கப்படும். புற்றுநோய் சிகிச்சைக்கு இந்த ஆய்வு பயன்படும்.

    அணு ஆராய்ச்சிகளில் தொழில் முனைவோர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல் உணவு பதப்படுத்துதல்மற்றும் விவசாய ஆராய்ச்சிகளில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    English summary
    Space research and Nuclear research will be privatized says FB Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X