4 நாட்கள் பயணமாக டெல்லி வருகை தந்தார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
Recommended Video
டெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாட்கள் பயணமாக டெல்லி வருகை தந்துள்ளார். டெல்லியில் மகிந்த ராஜபக்சேவை மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றார்.
இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்ற கோத்தபாய ராஜ்பக்சே முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகை தந்தார். டெல்லியில் பிரதமர் மோடியை கோத்தபாய ராஜபக்சே சந்தித்து பேசினார்.
அப்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோத்தபாய உறுதி அளித்தார். அதன்பின்னர் இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்தியா வருகை தந்தார்.
Sri Lanka Prime Minister Mahinda Rajapaksa arrives in Delhi on a four-day visit to India. He was received upon arrival by Union Minister Sanjay Dhotre. pic.twitter.com/lIRj4ADV7T
— ANI (@ANI) February 7, 2020
அவரிடம் கோத்தபாய ராஜபக்சே அளித்த உறுதிமொழி குறித்து இந்திய தரப்பில் நினைவூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது 4 நாட்கள் பயணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே டெல்லி வருகை தந்துள்ளார்.
எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கேரளாவில் கைது
டெல்லியில் மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே, மகிந்த ராஜபக்சேவை வரவேற்றார். வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மகிந்த ராஜபக்சே சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மன்மோகன்சிங், ராகுலுடன் மகிந்த ராஜபக்சே சந்திப்பு
டெல்லி வருகை தந்த மகிந்த ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
Delhi: Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa met Former Prime Minister Dr Manmohan Singh and Congress leader Rahul Gandhi. He is on a four-day visit to India. pic.twitter.com/ZvUnsNU0sF
— ANI (@ANI) February 7, 2020