அடுத்து காங்கிரஸ் தலைவர்தான்.. இந்திய இளைஞர் காங்கிரசிற்கு புதிய இடைக்கால தலைவர் நியமனம்!
இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.ஸ்ரீனிவாஸ் நியமன செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.ஸ்ரீனிவாஸ் நியமன செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் பாஜகவிற்கு தாவிக்கொண்டு இருக்கிறார்கள். முக்கிய சில உறுப்பினர்கள் மேலும் கட்சியை விட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியேற வாய்ப்புள்ளது என்று செய்திகள் வருகிறது.
லோக்சபா தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வந்த இரண்டே நாட்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்து அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிர்ச்சியில் இருந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதவி விலகல் கடிதம் மேலும் அதிர்ச்சியை அளித்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மூடுவிழா.. தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது!
இந்த நிலையில்தான் தற்போது இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.ஸ்ரீனிவாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் காங்கிரசின் துணை தலைவராக பி.வி ஸ்ரீனிவாஸ் இருந்து வந்தார்.
Srinivas BV has been appointed interim president of Indian Youth Congress. pic.twitter.com/MZxQiBpKWL
— ANI (@ANI) July 29, 2019
தற்போது அவர் அதன் தலைவராக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தேசிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று கூறுகிறார்கள். வரும் ஜூலை 31ம் தேதி இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தலைமையில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. இதில் அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.