டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப.சிதம்பரம் இப்படி ஓடி ஒளிஞ்சிட்டாரே.. டிவீட் போட்டு சு. சாமி குஷி

ப.சிதம்பரம் குறித்து சுப்பிரமணிய சுவாமி ட்வீட் போடுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ப.சிதம்பரம் இப்படி ஓடி ஒளிஞ்சிட்டாரே என்று சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளதுதான் தற்போது இணையத்தில் சுடசுட வைரலாகி வருகிறது.

ப.சிதம்பரத்துக்கு தமிழ்நாட்டில் எப்படி எச்.ராஜாவோ, அதுமாதிரி டெல்லியில் சுப்பிரமணியசாமிக்குதான் பரம விரிசல். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ப.சிதம்பரத்தை வறுத்தெடுப்பது சுப்பிரமணிய சாமியின் வழக்கம்.

Subramaniya Samy tweet about P Chidambaram case issue

11 வருஷமாக நடந்து வரும் சிதம்பரம் வழக்கு, இப்போது இறுதி கட்டத்தையும், உச்சத்தையும் எட்டியுள்ளது. அவரை கைது செய்ய வீட்டுக்கு சென்றபோது, அவர் அங்கு இல்லை என்ற தகவலை அறிந்து அதிகாரிகள் நேற்று சாயங்காலம் திரும்பிவிட்டனர்.

அதனால் ஊழல் காரணமாக அவர் தலைமறைவாகி இருக்கலாம் ஒரு பேச்சு எழுந்துள்ளது. அதனால் அவரை சிபிஐ வலைவீசி தேடி வருகிறது. இந்த சமயத்தில் சுப்பிரமணியசாமி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

#ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக் #ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக்

4 முறை மத்திய நிதியமைச்சர், ஒருமுறை உள்துறை அமைச்சர் என நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்த முக்கிய தலைவர் ஒருவர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தலைமறைவாக இருப்பது சரியா? என்று பாஜகவினர் ஏற்கனவே இணையத்தில் நோண்டி நுங்கெடுத்து வருகிறார்கள். இப்போது அப்படி ஒரு கேள்வியை சுவாமியும் கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

ப.சிதம்பரம் ஓடி ஒளிந்துள்ளார் என சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சுப்பிரமணிய சாமி எந்த ட்வீட் போட்டாலும் அது பரபரப்பாக பேசப்படும் என்பது தெரிந்த சமாச்சாரம்தான் என்றாலும், இந்த டுவீட்டுக்கு மட்டும் சுமார் 2 லட்சம் லைக்ஸ்களுக்கு மேல் குவிந்துவருவது ஆச்சரியமாக உள்ளது.

English summary
Senior Leader Subramaniya Swamy tweet about P Chidambaram INX case issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X