டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முடியாது:சுப்ரீம்கோர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளத. இந்திய அரசியல் சாசனத்தில் இந்த 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டும் வருகிறது.

Supreme Court defers hearing of PIL against 69% Reservation

அதேநேரத்தில் உச்சநீதிமன்றமானது மாநிலங்களில் இடஒதுக்கீடானது 50%க்கு மேல் இருக்கக் கூடாது என தீர்ப்பளித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழக 69% இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தினேஷ் என்பவர் புதியதாகவும் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச், மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் தீர்ப்பு வரும் வரை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றார்.

English summary
The Supreme Court today defered the hearing of the PIL against 69% Reservation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X