Breaking News: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.. தமிழிசை வரவேற்பு
டெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இவ்வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அதிரடியாக கூறி, ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு வெளியானததையடுத்து, காலை முதல் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு வெளியானதும், தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு செல்லத்தக்கது இல்லை
ஸ்டெர்லைட்டை மூட பிறப்பித்த தமிழக அரசின் அரசாணை செல்லுபடியாகும்
அரசியல் சாசன அமர்வுதான் தமிழக அரசின் அரசாணை தொடர்பாக விசாரிக்க முடியும்- உச்சநீதிமன்றம்