அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு
டெல்லி: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதனிடையே, அடுத்தடுத்து, 16 எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். 13 பேர் காங்கிரசையும், 3 பேர் மஜத கட்சியையும் சேர்ந்தவர்கள். ஆனால் இதுவரை இவர்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதையடுத்து முதலில் 10 எம்எல்ஏக்களும், பின்னர் 5 எம்எல்ஏக்களும், சபாநாயகர் தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர், முதல்வர், எம்எல்ஏக்கள் தரப்பு வாதங்களை கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் எப்போது முடிவெடுக்க வேண்டும் என்பது சபாநாயகர் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அதேநேரம், ராஜினாமா கொடுத்த எம்எல்ஏக்கள் சபாநாயகர் முடிவெடுக்கும் வரை சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால், கர்நாடக அரசு சிக்கலில் சிக்கியுள்ளது.
இதுதொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு, இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.
#WATCH Karnataka CM HD Kumaraswamy declines to comment, when asked about Supreme Court's verdict on Karnataka rebel MLAs. #Karnataka pic.twitter.com/aR1ww6aNgl
— ANI (@ANI) July 17, 2019