2001 ல் தீவிரவாதிகள் நுழைந்த பாதை... நாடாளுமன்றத்திற்குள் காங். எம்.பி காரால் பரபரப்பு
டெல்லி: 2001 ம் ஆண்டு தீவிரவாதிகள் நுழைந்த கேட் வழியாக நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற காரால் பரபரப்பு ஏற்பட்டது.
2001 ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குள் கார்கள் செல்லும் வழியில் இல்லாமல் வேறு பாதையில் உள்ளே நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்தநிலையில், இன்று ஒரு கார், நாடாளுமன்றத்தில் 2001 ம் ஆண்டு தீவிரவாதிகள் நுழைந்த தவறான வழியில் வேகமாக நுழைய முயன்றது. இதனால், எச்சரிக்கையான பாதுகாப்பு அதிகாரிகள், காரை சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர்.
இதில், அந்த காரின் பம்பர் உடைந்தது. விசாரணையில் அந்த கார் மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி தக்கோம் மெய்னியாவுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. சம்பவத்தின் போது எம்.பி தக்கோம் மெய்னியா காருக்குள் இல்லை.
தவறான வழியில் காங்கிரஸ் எம்.பி.யின் கார் நுழைய முயன்ற சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு
ஏற்பட்டது. இதே போன்று, கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் டாக்ஸி ஒன்று தவறான வழியில் நுழைய முயன்றது. அப்போது அலாரம் ஒலித்ததால் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.