சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்
டெல்லி: விசாரணை ஏஜென்சிகளால் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று இரவு சென்றார் சிதம்பரம். இதையடுத்து அவரது வீட்டுக்கு பின்தொடர்ந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர்.
இதனிடையே வாசலில் நின்ற காங்கிரஸ் தொண்டர்கள், சிபிஐ அதிகாரிகள் உடன் மோதலில் ஈடுபட்டனர். பெரும் தள்ளுமுள்ளு அங்கே ஏற்பட்டது.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியுள்ளதாவது: "விசாரணை ஏஜென்சிகளால் அரங்கேற்றப்படும் நாடகமும் காட்சியும் சிலரின் உணர்ச்சிவசப்பட்ட இன்பத்தை திருப்திப்படுத்தவும், வெறுமனே பரபரப்பை ஏற்படுத்துவதுவதற்காகவும்தான்" என்று தெரிவித்துள்ளார்.