பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன
டெல்லி: பிரான்ஸில் இருந்து மேலு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வடைந்தன. பிரான்சில் புறப்பட்டு எங்கும் நிற்காமல் 7,000 கி.மீ தொடர்ந்து பறந்த இந்த விமானங்கள் இந்தியா வந்தன.
பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ரஃபேல் ஒப்பந்த விவகாரம் நாட்டில் பெரும் புயலையும் கிளப்பி இருந்தது.
இதுவரை 2 கட்டங்களாக மொத்தம் 8 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்த ரஃபேல் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்தின.
டெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா
இதனிடையே மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. பிரான்ஸில் புறப்பட்டு 7,000 கி.மீ. இடைநிற்காமல் இந்தியாவை வந்தடைந்தன இந்த விமானங்கள். நடுவானில் இந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப அமீரக விமானப் படை டேங்கர் விமானம் உதவியது.
எஞ்சிய விமானங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.