4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video
டெல்லி: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரையிலும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கோடை மழை கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த ஒருமாதகாலமாக வெயில் வாட்டி வதைத்தது. கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. பாலகோம்பை, ஏத்தகோவில், கன்னியபிள்ளைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால், நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது. இதே போல், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.