டைம்ஸ் நவ் சர்வே: லோக்சபா தேர்தலில் நோ மெஜாரிட்டி.. மாநில கட்சிகளே கிங் மேக்கர்.. கருத்து கணிப்பு!
2019 லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
டெல்லி: 2019 லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக் சபா தேர்தல் விறுவிறுப்பு இப்போதான் தொடங்கி வருகிறது. லோக் சபா தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் இப்போதே வெளி வர தொடங்கி இருக்கிறது
தற்போது லோக்சபா தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி 229 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றிபெறும். 123 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். 138 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்.
இதனால் லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. லோக் சபாவில் மொத்தம் 543 உறுப்பினர்கள் தேவை. இதில் மெஜாரிட்டி பெற 272 உறுப்பினர்களின் பலம் தேவை.
அதனால், மாநில கட்சிகள், சிறிய கட்சிகளின் ஆதரவு யாருக்கோ அவர்களே 2019 தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க முடியும் என்று தேர்தல் கருத்து கணிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.