காங். புதிய நியமனங்களில் தமிழகத்தின் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், ஜோதிமணிக்கு இடம்
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அறிவித்த பல்வேறு புதிய நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் மற்றும் ஜோதிமணி ஆகியோர் டம்பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயற்குழு உறுப்பினர்கள், புதிய பொதுச்செயலாளர்கள், மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு, தேர்தல் குழு என பல்வேறு நியமனங்களை வெளியிட்டுள்ளார்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான ப.சிதம்பரம், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளர்கள் பட்டியலில் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
காங். செயற்குழு மாற்றியமைப்பு- தமிழக பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ், உ.பி.க்கு பிரியங்கா நியமனம்
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் உறுப்பினராக ஜோதிமணி நியமிக்கப்பட்டிருக்கிறார். மாநில கமிட்டிகளுக்கான 17 மேலிடப் பொறுப்பாளர்களில் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் இடம்பெற்றிருக்கின்றனர்.
தெலுங்கானா மாநில மேலிடப் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூரும் ஒடிஷா பொறுப்பாளராக செல்லக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.