கஜா புயல்: மத்திய அரசிடம் தமிழக அரசின் கோரிக்கை என்ன?.. இதோ முழு விவரம்
Recommended Video
முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி கேட்கிறது தமிழகம்,முதல்வர் பேட்டி- வீடியோ
டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கஜா புயல் நிவாரண தொகையாக 14 ஆயிரத்து 910 கோடி வழங்க வேண்டுமென்றும், உடனடியாக 1431 கோடி தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டிருக்கிறது. கஜா புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.
அதில் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கான நிவாரணம், கால்நடை பராமரிப்பு, விவசாயம் மற்றும் தோட்டக் கலை பயிர்கள், மின்சாரம், மீன்வளம், பொதுப் பணித் துறை, சுகாதாரம், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பணிகளுக்காக 14, 910 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக கோரியுள்ளார் முதல்வர்.
மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய நிதியின் முழு விவரம் இதோ....
Comments
English summary
Tamilnadu Government submits memorandam on demanding 14 thousands crore as Gaja relief fund for first phase from Centre.