தேர்தல் கணிப்புகளால் திடீர் மாற்றம்.. ராகுல், சோனியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மாயாவதி
Recommended Video
டெல்லி: டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என அந்த கட்சி திடீரென பல்டி அடித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் திமுக அதிமுக கட்சிகளாக இருந்து வந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இந்த முறை இணைந்து மகா கூட்டணி என்ற பெயரில் மக்களவை தேர்தலை சந்தித்துள்ளன. இதன்படி இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக தனியாக தேர்தலை சந்தித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியும் தனித்து தேர்தலை சந்தித்துள்ளது. இந்நிலையில் தேசிய மற்றும் மாநில ஊடகங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணியே 60க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தேசிய ஊடங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி 10 முதல் 16 இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மாயாவதி இன்று சந்திக்க உள்ளதாக நேற்று காலையில் செய்திகள் வெளியாகி இருந்தது.
ஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல்.. பாஜக 315 இடங்கள், காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும் என கணிப்பு
இந்நிலையில் டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என அந்த கட்சியின் நிர்வாகி எஸ்.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக வந்த நிலையில், மாயவதி கட்சியின் இந்த பல்டி காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.