மீண்டும் வெற்றி.. ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம்.. பிரதமர் மோடி!
டெல்லி: அனைவரும் ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. இதில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 345 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்து முன்னிலையில் உள்ளது.
பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர உள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒன்றாக நாம் வளர வேண்டும். நாம் ஒன்றிணைந்து வளமாகவேண்டும். நாம் ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியா மீண்டும் வெற்றி! இவ்வாறு பிரதமர் மோடி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
सबका साथ + सबका विकास + सबका विश्वास = विजयी भारत
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 23, 2019
Together we grow.
Together we prosper.
Together we will build a strong and inclusive India.
India wins yet again! #VijayiBharat