வடமாநிலங்களில் நிலநடுக்கம்.. டெல்லியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவு.. மக்கள் பீதி
டெல்லி: டெல்லி, புறநகர் மற்றும் வடஇந்தியாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
மன்றம் அமைந்துள்ள இடம், பத்திரிகையாளர் மன்றம் அருகேயும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பிதீ அடைந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் இன்று மாலை உணரப்பட்டது.
|
6.1 பதிவு
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அதாவது 173 கி.மீ.தூரத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
சேதம் இல்லை
இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. மேற்கண்ட விவரங்கள் தெரியவில்லை.
|
சீலிங்
நிலநடுக்கத்தால் நொய்டாவில் ஒரு வீட்டில் சீலிங்கில் மாற்றப்பட்ட அலங்கார பொருட்கள் ஆடும் காட்சி.
|
விளக்கு
நிலநடுக்கம் ஏற்பட்ட நொய்டாவில் ஒரு வீட்டில் சீலிங்கில் உள்ள அலங்கார விளக்குகள் ஆடும் காட்சி.