முத்தலாக் மசோதா.. மேலிட உத்தரவிற்காக காத்திருக்கும் அதிமுக எம்.பிக்கள்.. என்ன செய்வார்கள்?
இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும் முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக மாநிலங்களவை எம்.பிக்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி: இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும் முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக மாநிலங்களவை எம்.பிக்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முத்தலாக் மசோதா கடந்த வாரம் லோக் சபாவில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டது. தலாக் என்று மூன்று முறை சொல்லி பெண்களை இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறைக்கு எதிராக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதா இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் ராஜ்ய சபாவில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மசோதா வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக மசோதா
இந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதாவை அதிமுக மாநிலங்களவை எம்.பிக்கள் ஆதரிப்பார்களா, மாட்டார்களா என்று கேள்வி எழுந்து இருக்கிறது. மாநிலங்களவையில் அதிமுக மூன்றாவது பெரிய கட்சியாகும்.
பெரிய பலம்
மாநிலங்களவையில் பாஜகவிற்கு 73 பேர் பலம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 50 பேர் பலம் உள்ளது. அடுத்தபடியாக அதிமுகவிற்கு 13 பேர் பலம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவிற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும், இதற்கு எதிராக வாக்களிக்க போவதாகவும் தெரிவித்துள்ளது.
அதிமுக பேட்டி
இதனால் இன்று அதிமுக என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. அதிமுக யாருக்கு ஆதரவாக செயல்படும் என்று கேள்வி எழுந்து இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, மாநிலங்களவையில் அதிமுக முத்தலாக்கிற்கு எதிராக வாக்களிக்கும் என்று கூறி இருந்தார். ஆனால் இதுகுறித்து அதிமுக சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
முடிவு
இன்று அதிமுக தலைமையிடம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்று தகவல் வந்த பின்புதான், அதிமுக எம்.பிக்கள் செயலாற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் அதிமுக எம்.பிக்கள் யார் பக்கமும் நிலைப்பாடு எடுக்காமல் அவையைவிட்டு வெளிநடப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.