இந்தியா, ஜப்பான், கனடாவில் ஸ்தம்பித்து மீண்டு வந்த டுவிட்டர், ட்வீட் டெக்!
டெல்லி: இந்தியா, ஜப்பான், கனடாவில் டுவிட்டர் பக்கம் இயங்கவில்லை என புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சரி செய்த பின்னர் தற்போது முழுமையாக இயங்கி வருகிறது.
சமூகவலைதளம் எனப்படுவது ஆன்லைன் மூலம் இந்த சமூகத்துக்கு எடுத்துரைப்பதற்கு தேவையான கருவியாகும். இதை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஜப்பான், கனடா, இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் ட்விட்டர் பக்கங்கள் செயலிழந்தன. இதுகுறித்து உலகம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட புகார்கள் ட்விட்டர் நிறுவனத்துக்கு சென்றன.
இதையடுத்து ட்விட்டர் மற்றும் ட்வீட் டெக் ஆகியவற்றில் சில பிரச்சினைகள் காணப்படுகிறது. அவற்றை நாங்கள் சரி பார்த்து வருகிறோம். விரைவில் இயல்பு நிலையை அடையும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது வழக்கம் போல் ட்விட்டர் மீண்டு வந்துவிட்டது. இதனால் ட்விட்டர்வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.