டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இரட்டை இலை சின்னம்.. டிடிவி தினகரன் கோரிக்கை நிராகரிப்பு.. அவசர வழக்காக விசாரிக்க முடியாது!

இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்கு அளிக்கப்பட்டதற்கு எதிரான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு மனு மார்ச் 15ம் தேதி விசாரணை செய்யப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்கு அளிக்கப்பட்டதற்கு எதிரான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு மனு மார்ச் 15ம் தேதி விசாரணை செய்யப்பட உள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் அதிமுகவில் வரிசையாக பல பிரச்சனை வந்தது கடைசியாக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு தனியாக வந்தது.

Two Leaves Symbol Case: No urgent to hear the case, says Supreme Court to TTV Dinakaran appeal.

இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை முடக்கியது.

அதன்பின் 2017 நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு டெல்லி ஹைகோர்ட் சென்றது.

இந்த வழக்கில் இரண்டு வாரம் முன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கினார். இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்குத்தான் சொந்தம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது.

Also Read | இறங்கி வந்த தேமுதிக.. மரத்தில் ஏறிய தமாகா.. அதிமுக கூட்டணியில் ஒரே தமாஷ்தான்!

இரட்டை இலை சின்னத்தை அதிமுக பயன்படுத்துவது சரிதான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்கு அளிக்கப்பட்டதற்கு எதிரான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு மனு மார்ச் 15ம் தேதி விசாரணை செய்யப்பட உள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து இருக்கிறார்.

English summary
Two Leaves Symbol Case: No urgent to hear the case, says Supreme Court to TTV Dinakaran appeal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X