மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்
டெல்லி: மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனாவால் தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார்.
இதேபோல் அண்மையில் உத்தரப்பிரதேச அமைச்சர் கமல் ராணி கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
காங். செய்தி தொட்ர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் காலமானார்- பிரியங்கா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல்
உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்திலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
தற்போது மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து வீட்டிலேயே தாம் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ஶ்ரீபாத் நாயக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.