மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு
டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது நலமடைந்துள்ளார்.
இதேபோல் மத்திய, மாநில அமைச்சர்கள், ஆளுநர் என பலரும் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் கமலா ராணி ஆகியோர் உயிரிழந்தனர்.
எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம்- அச்சப்படும் நிலை இல்லை: எஸ்.பி.பி. சரண்; பிரபலங்கள் பிரார்த்தனை
இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு; டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம் என கூறப்பட்டு வருகிறது. இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தி உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பாக ஊடகங்களுகு நாள்தோறும் தகவல்களை தெரிவித்து வந்தவர் லாவ் அகர்வால் என்பதும் குறிப்பிடத்தக்கது.