இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு.. மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்துள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அது போல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 67 பேர் குணமடைந்துவிட்டனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 748 லிருந்து 906 ஆக அதிகரித்துள்ளது.
There are 748 active #COVID19 cases so far in the country. 67 cured/discharged/migrated cases and 19 deaths: Ministry of Health and Family Welfare. pic.twitter.com/FXYk9rUza4
— ANI (@ANI) March 28, 2020
அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் ஒரு லட்சமாக உயர்வு.. அதிக பாதிப்புள்ள முதல் நாடானது
விமான நிலையங்களில் இது வரை 15, 24, 266 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதிக அளவில் கேரளாவில் 176 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதற்கடுத்து மகாராஷ்டிராவில் 162 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 21 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.