மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு கொரோனா- கொரோனாவை ஒழிக்கும் அப்பளத்தை ரிலீஸ் செய்தவர்!
டெல்லி: மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சரான அர்ஜூன் ராம் மேக்வால் தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் ஆலோசனைப்படிதான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அர்ஜுன்ராம் மேக்வால் கூறியிருந்தார்.
அண்மையில் அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பாபிஜி என்ற அப்பளத்தை அவர் அறிமுகம் செய்திருந்தார். அத்துடன் அந்த அப்பளம்தான் கொரோனாவை ஒழிக்கும் சக்தி கொண்டது எனவும் பிரசாரம் செய்திருந்தார்.
அப்பளம் வாங்கலையோ அப்பளம்..கொரோனாவை ஒழிக்குமாம் பாபிஜி அப்பளம்- மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்
ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனம் தயாரித்த அப்பளத்தைதான் கொரோனாவை ஒழிக்கும் சக்தி கொண்டது என அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.