செல்ல நாயை ரயிலில் அழைத்துச் சென்ற மத்திய அமைச்சர்.. காரணத்தைக் கேட்டா ரூம் போட்டு சிரிப்பீங்க!
ரயிலில் சிக்னல் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேடிக்கையான செயல் ஒன்றைச் செய்துள்ளார் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ.
Recommended Video
டெல்லி : பொதுவாக நாம் ரயிலில் போகும் போது மொபைலில் சரியாக சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுவது தொடர்கதையே. ஆனால் இந்த பிரச்சினைக்கு எளிதாக தீர்வுகண்டிருக்கிறார் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ.
அவருடைய செல்ல நாய் எட்டியின் போட்டோ டிவிட்டரில் பதிவிட்டு, வோடபோன் மொபைல் நெட்வொர் தன்னை பின்தொடரும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டரில், "வோடபோன் நெட்வோர்க் என்னை பின் தொடரும் என நம்பி, எனது செல்ல நாய் பக்கி எட்டியை என்னுடன் ரயிலில் அழைத்து சென்றேன்", என கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த நக்கல் டிவீட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, அவரும் அவருடைய செல்ல நாயும் ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டனர்.
வோடபோன் நெட்வொர்க் விளம்பரம் மூலம் பேமசானது பக் நாய். அந்த விளம்பரத்தின் மூலம் ஹட்ச் நாய் என அந்நாய்க்கு பேரே மாறிப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.