ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் இன்று இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நமது கையில் தடுப்பூசிகள் இருந்த போதிலும் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. சாதாரண மக்கள் மட்டுமில்லாது அரசியல்வாதிகளையும் கொரோனா போட்டு தாக்கி வருகிறது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா... 8 மாதங்களில் இரண்டாவது முறையாக வைரஸ் பாதிப்பு
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் கூறிய பிரகாஷ் ஜவடேகர், ' எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . கடந்த 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் இன்று இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.