3 சமஸ்கிருத பல்கலைக் கழகங்களுக்கு மத்திய பல்கலைக் கழக அந்தஸ்து
Recommended Video
டெல்லி: திருப்பதி மற்றும் டெல்லியில் இயங்கி வரும் 3 சமஸ்கிருத பல்கலைக் கழகங்களுக்கு மத்திய பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1961-ம் ஆண்டு ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் சார்பில் திருப்பதியில் சமஸ்கிருத பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் 1962-ல் லால் பகதூர் சாஸ்த்ரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம், 1972-ல் ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தன் ஆகியவை சார்பில் சமஸ்கிருத பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.
இப்பல்கலைக் கழகங்கள் மத்திய பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதனை ஏற்று மத்திய அரசு தற்போது மத்திய பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
என்னை தூக்கி உள்ளே போட்டவர்களை மறக்க மாட்டேன்.. அதுக்குதான் இந்த தாடி.. அதிர வைத்த டிகே சிவக்குமார்
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.தெரிவித்துள்ளார். இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜவடேகர் கூறினார்.