பலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்
டெல்லி: நாட்டின் பலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூல்தான் சான்று என தாம் தெரிவித்த கருத்தை திரும்பப் பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், காந்தி ஜெயந்தி அன்று வெளியான 3 சினிமாக்களின் வசூல் மட்டும் ரூ120 கோடி. நமது நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு இந்த சினிமாக்களின் வசூலே சான்று என கூறியிருந்தார்.
ரவிசங்கர் பிரசாத்தின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து இன்று தமது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ரவிசங்கர் பிரசாத், தாம் தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் சில வருடங்கள் மோசமாக இருக்கும்.. கவனம் தேவை.. மாமல்லபுர வருகைக்கு பின் ஜின்பிங் அறிக்கை!
நான் என்ன அடிப்படையில் அந்த கருத்தை தெரிவித்தேன் என்பதை என்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் உள்ள வீடியோக்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நான் தெரிவித்ததன் ஒரு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நான் தெரிவித்திருந்த அந்த கருத்தை திரும்பப் பெறுகிறேன் என கூறியுள்ளார்.