பல்கலைகள் விரும்பினால் முதல், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் - சுப்ரீம் கோர்ட்
பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதல் மற்றும் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் புது உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
டெல்லி: கல்லூரி மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை விரும்பினால் நடத்தலாம் என்று புது உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் அறிவிப்புக்கு மாணவர்கள் பேனர் வைத்து முதல்வரை வாழ்த்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும் ஒரேடியாக 20 அரியர் வைத்திருந்த மாணவர்களின் அரியர் கிளியர் செய்யப்பட்டதாலும் மாணவர்களின் கல்வித்தகுதி கேள்விக்குறியாகும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் அமைப்பினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இறுதியாண்டில் படிக்கும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதோடு மாணவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் ஆயத்தபணியில் ஈடுபட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில்கள்.. காலை மற்றும் மாலையில் மட்டுமே ஓடும்.. டைம் டேபிள் அறிவிப்பு
இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் யுஜிசி தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு முதலாம், இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.