அன்லாக் 4.0: மத நிகழ்வுகள், பொது கூட்டங்களை நடத்த செப்.21 முதல் அனுமதி.. விதிமுறைகள் அறிவிப்பு
டெல்லி: சமூக நிகழ்வுகள், கூட்டங்கள், மத நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், கலாசசார கூட்டங்கள், விளையாட்டு போட்டிகளுக்கு செப்டம்பர் 21 முதல் அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுக்க கொரோனவை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய அரசு மூலம் தற்போது அன்லாக் 4.0 அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30 வரை முழு லாக்டவுன் அமலில் இருக்கும்.
இதில் அன்லாக் 4.0 செயல்முறை செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். அன்லாக் 4.0வின் கீழ் பொதுகூட்டங்கள் நடத்துவது தொடர்பாக விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
கூட்டங்கள் தொடர்பான விதிமுறைகள்:
சமூக நிகழ்வுகள், கூட்டங்கள், மத நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், கலாச்சார கூட்டங்கள், விளையாட்டு போட்டிகளுக்கு செப்டம்பர் 21 முதல் அனுமதி.
100க்கும் குறைவான நபர்கள் பங்கு பெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி.
மாஸ்க், கிளவுஸ் அணிவது கட்டாயம். பங்கு பெறும் எல்லோருக்கும் தெர்மல் சோதனை நடத்த வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே லாக்டவுன் போட கூடாது.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
செப்டம்பர் 20 வரை திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி. மரண ஊர்வலங்களில் 20 பேர் மட்டுமே அனுமதி.
செப்டம்பர் 20க்கு பிறகு திருமண விழாக்களில் மரண ஊர்வலங்களில் 200 பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.