மோடியுடன் முக்கிய விஷயங்களை விவாதித்தேன்.. அது என்னவென்று சொல்ல முடியாது: வைகோ பரபர
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தாம் முக்கியமாக சில விஷயங்களை விவாதித்தேன் என்றும் அது குறித்து வெளியே சொல்ல முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.
23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்ற புலி என அழைக்கப்படும் வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைகிறார். தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசின் திட்டங்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைகோ ராஜ்யசபாவுக்கு செல்வது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லிக்கு நேற்று வருகை தந்த வைகோ நாடாளுமன்றத்துக்கு சென்றார். அங்கு அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர், முரசொலி மாறன், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். நாடாளுமன்றத்துக்கு வந்த வைகோவுக்கு எம்.பி.க்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
1 கோடி பேரை கொல்ல முடியாது.. ஆப்கானிஸ்தானை 1 வாரத்தில் மேப்பில் இருந்து அகற்றுவோம்.. டிரம்ப் திடுக்
சு.சுவாமி வாழ்த்து
வைகோவின் பரம வைரியான பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஓடோடி சென்று வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் கை குலுக்கிக் கொண்டு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
மோடியுடன் வைகோ சந்திப்பு
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியையும் வைகோ சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: பிரதமர் மோடியை நான் சந்தித்தேன்.
மோடியின் கமெண்ட்
மோடியையும் அவரது அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறேன். இருந்தபோதும் அவர் என்னை அன்போடு வரவேற்றார். அப்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதாக மோடி கூறினார். அதைப்பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மோடியிடம் சொன்ன முக்கியமானவை
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவின் பாதிப்பு, ஆந்திராவில் 20 தமிழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம், நதிகள் இணைப்பு ஆகியவை குறித்து மோடியிடம் விளக்கினேன். ஈழத் தமிழர் பிரச்சனை, மகிந்த ராஜபக்சே போர்க்குற்றவாளி ஆகியவை குறித்தும் பேசினேன்.
மிக முக்கியமான விஷயங்கள்
அத்துடன் சில மிக முக்கியமான விஷயங்களையும் விவாதித்தேன். அதைப்பற்றி வெளியில் சொல்ல முடியாது. இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.