தமிழகத்தில் வெற்றிடமா?.. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினே நிரப்பிவிட்டாரே.. வைகோ
Recommended Video
டெல்லி: தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நீர் மேலாண்மை விஷயத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. கர்நாடகம் தென்பெண்ணையில் 70 சதவீத அணை கட்டும் பணிகளை முடித்துவிட்டது. இது குறித்து தமிழக அரசு தீர்ப்பாயத்தை அணுகாதது ஏன் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. அது போல மேகதாது, ஹைட்ரோ கார்பன் என பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக வேண்டுமானால் முயற்சி செய்யும். ஆனால் திமுக அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி தொடரும்.
சபரிமலையில் பரபரப்பு.. கோவிலுக்கு செல்ல முயன்ற 7 இளம் பெண்கள்.. போலீசால் தடுத்து நிறுத்தம்
தமிழகத்தில் வெற்றிடம் என்ற ஒன்று இல்லை. அறிவியலிலேயே வெற்றிடம் இல்லை. தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றார் வைகோ.