நெல் அறுவடை செய்யும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ- வெங்கையா நாயுடு பாராட்டு
Recommended Video
டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல் வயலில் அறுவடை செய்வது போன்ற படங்கள் வெளியானதற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று முதல்வன் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிராக்டர் ஓட்டுவது, நெல் வயலில் அறுவடை செய்வது போன்றவையும் இடம் பெற்றிருந்தன.
இப்படங்களை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதில் நெல் அறுவடை செய்த கையுடன் இருக்கும் படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Pleased to see Chief Minister of Tamil Nadu, Shri Edappadi K. Palaniswami working in fields as a farmer, who will never forget his roots. It may be symbolic but it inspires people. Everyone should focus on making agriculture profitable and sustainable. This is the need of hour. pic.twitter.com/cmcnKWaIHU
— Vice President of India (@VPSecretariat) January 19, 2020
இதை தமது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்வர் எடப்பாடி தாம் ஒரு விவசாயி என்பதை மறக்கவில்லை. இப்படங்கள் ஒரு அடையாளம் என்றாலும் மக்களை ஈர்க்கும் என்று பாராட்டியுள்ளார்.
நாடு விடுதலை அடைந்தபின் பாகிஸ்தானில் வசிக்க விரும்பினார் காந்தி- புதிய புத்தகத்தில் எம்.ஜே. அக்பர்